அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Tuesday, August 31, 2010

துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்

இடுகையிட்டது பாலைவனத் தூது

துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Monday, August 30, 2010

நரகிலிருந்து புனித ரமளானில் பாதுகாப்புத் தேடுவோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்தின் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
புனிதமிக்க ரமலானின் இறுதிக் காலகட்டத்தை அடைந்துள்ளோம். ஆயிரம் மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கதர் எனும் சிறப்புமிக்க இரவை தாங்கி வரும் இந்த இறுதிப் பத்தில், இறைவன் நிராகரிப்பாளர்களுக்காகவும்-இணைவைப்பாளர்களுக்காகவும்-பாவிகளுக்ககவும் சித்தப்படுத்தியுள்ள நரகத்திலிருந்து பாதுகாப்புப்பெற எஞ்சியுள்ள புனித ரமலானை நாம் பயன்படுத்த முன்வரவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக அமல்களை கொண்டு அழகுபடுத்த வேண்டிய இந்த நாட்களை, அழகான ஆடைகள் எடுப்பதிலும், அழகுசாதன பொருட்களை வாங்குவதிலும், வீட்டை அழகுபடுத்துவதிலும் சமுதாய மக்கள் கூடுதல் கவனம் செலுத்துவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் நரகம் எவ்வளவு கடுமையானது என்பதை அறியாமலிருப்பதுதான். இன்னும் சிலர் நரகத்தை வேடிக்கையாககருதுவதையும் பார்க்கிறோம்.

சமீபத்தில் ஒரு அறிஞர் தலைமை தாங்கிய இஸ்லாமிய பட்டிமன்றம் பார்த்தோம். அதில் நகைச்சுவைக்காக சுவனத்தையும்-நரகத்தையும் பற்றி ஒருதம்பதியர் சம்பாஷணையில் இப்படி வர்ணிக்கிறார்

கணவன்;[மனைவியிடம்] அடியே! மவ்த்துக்கு பின்னால், நீ சொர்க்கத்துக்கு செல்வாயா? நரகத்துக்கு செல்வாயா?

மனைவி; நான் சொர்க்கத்துக்குத்தான் செல்வேன் என்று சொல்லிவிட்டு, கணவனை நோக்கி; நீங்கள் சொர்க்கத்திற்கு செல்வீர்களா? நரகத்திற்கு செல்வீர்களா?

கணவன்; நான் நரகத்திற்குத்தான் செல்வேன் ஏனெனில், நீ போன பின்னாடி சொர்க்கம் சொர்க்கமாவாஇருக்கும்?

மனைவி; அப்ப நானும் நரகத்திற்கு வருவேன்.

கணவன்; என்மீது உனக்கு அவ்வளவு பாசமா?

மனைவி; பாசமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. நீங்கள் நரகில் படும் வேதனையை நான் பார்த்து ரசிக்கத்தான்..!


இப்படியாக நகைச்சுவை என்ற பெயரில் சொர்க்கம்-நரகை பற்றி ஏளனமாக வர்ணிக்கிறார். இவர் மட்டுமல்ல சமுதாயத்தில் பெரும்பாலோர் நரகின் வேதனை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. காரணம் நரகத்தின் வேதனைகளை தெளிவாக அறியாததினால்தான். நரகத்தின் வேதனையை பற்றி வர்ணித்தால் அது பல பக்கங்களை எட்டும். எனவே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல, நரகின் கடுமையை அறிய ஒரே ஒரு பொன்மொழி;


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்' என்று சொல்ல கேட்டேன்.[புஹாரி]



மிக குறைவான தண்டனையை அனுபவிக்கும் அபூதாலிப் அவர்களின் மூளைகொதிக்கும் என்றால், அதிகப்படியான தண்டனை பெறுபவர்களின் நிலை என்ன என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட நரகிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இந்த இறுதிப்பத்தில் செய்யவேண்டியவைகள்;


லைலத்துல் கத்ரை தேடுதல்;

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:1)
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (97:2)
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். (97:3)
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். (97:4)
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:5)




ஒரு இரவில் நாம் நின்று வணங்குவதன் மூலம் ஆயிரம் மாதத்திற்கும் மேலாக வணங்கிய நன்மையை வாரித்தரும் இரவுதான் லைலத்துல் கதர் இரவு. இந்த இரவு எப்போது என்று நபி[ஸல்] அவர்கள் அறுதியிட்டுக்கூறாமல், ரமலானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என்று கூறியுள்ளார்கள்.


அந்த இரவு நோன்பு 21 -23 -25 -27 -29 ஆகியவற்றில் எதாவது ஒரு இரவில் இருக்கலாம். இத்தகைய சிறப்புவாய்ந்த இரவின் அமலை கெடுக்கும் வகையில் சுன்னத்ஜமாத் என்று தங்களை கூறிக்கொள்வோர் நோன்பு 27 அன்றுதான் லைலத்துல் கத்ர் என்று தீர்மானமாக முடிவு செய்து அமல் செய்வதை பார்க்கிறோம்.
ஒருவேளை அன்று லைலத்துல் கத்ர் இல்லாமல் முந்திய-அல்லது பிந்தைய நாளில் இருந்தால் என்னாகும் என்ற அச்சம் இவர்களுக்கு இல்லை. எனவே இவர்கள் பேச்சை கேட்டு அமலை வீணாக்கிவிடாமல், நபி[ஸல்] அவர்களின் கூற்றுப்படி இறுதிப்பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேட முற்படவேண்டும்.


இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்களின் அமல்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"
நூல்;புஹாரி எண் 2024 ]

முன்-பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நபி[ஸல்] அவர்களே இறுதிப்பத்தில் இல்லறத்தொடர்பு துறந்து இறைவனை வணங்குவதோடு-தமது குடும்பத்தாரையும் அல்லாஹ்வின் அருளைப்பெரும் அமல் செய்ய தூண்டுகிறார்கள் எனில், பாவங்களில் புரளும் நாம் எந்த அளவுக்கு இந்த இறுதிப்பத்தில் அமல் செய்யவேண்டும் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
'இஃதிகாப்' இருத்தல்;
ரமலானில் இறுதிப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள். இஃதிகாப் என்பது [அவசிய தேவைக்கன்றி] வெளியே வராமல் பள்ளிவாசலில் தங்கி அமல் செய்வதாகும். துரதிஷ்டவசமாக இந்த நபி வழியை பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் கூட செய்யத்தயாரில்லை. இனியேனும் இந்த நபி வழிக்கு உயிர்கொடுக்க முன்வரவேண்டும்.
பிரார்த்தனைகளை அதிகமாக்குவது;
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)[திர்மிதி]


எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த புனித ரமலான் மூலம் பாவங்களை விட்டும் தூரமாகி, அவனது அருளுக்குரிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!

உம்ரா வழிகாட்டி அதிகமான விளக்கங்களுடன்...



அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196)

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)

ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.


எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம்
அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!

உம்ரா செய்யும் முறை
  • எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
  • தவாஃப் செய்ய வேண்டும்.
  • ஸயீ செய்ய வேண்டும்.
  • மொட்டையடிக்க வேண்டும்.
  • பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்கவிலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை

இஹ்ராம் அணிவதற்கெனஎல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன்குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.

விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும். ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.

இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும், முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.

தல்பிய்யா

எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர்,
லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.

லப்பைக், அல்லாஹீம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.

பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும்அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.

தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.

இஹ்ராம் அணிந்துள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள்

  • திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
  • வேட்டையாடுவது.
  • உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
  • தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
  • முடி, நகம் வெட்டுவது.
  • கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
  • தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...


பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக

என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை


கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹீ அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்திஅல்லாஹீ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.

முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக் கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும்.

தவாஃபின் போது நமக்கு தெரிந்த
திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்

பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.

இவ்வாறாக ஏழு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால்வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ் என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும்.இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் - அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹீவல்லாஹீஅஹது (இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.

ஸூரத்துல் காபிரூன்


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾



ஸூரத்துல் இஃக்லாஸ்

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾


இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும்.
இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.

ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும் போது...



இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்

பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி

அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர் - அல்லாஹீ அக்பர்

லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹீ லாஷரிகலஹீ லஹீல் முல்கு வலஹீல் ஹம்து வஹீவ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ இல்லல்லாஹீ வஹ்தஹீ, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை ஓத வேண்டும்.

பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது. அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.

ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.


(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.

இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)

நன்றி:http://dubaitntj.blogspot.com/

Saturday, August 28, 2010

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



நமது இணையத்தில் வெளியிட்டு உள்ள நேபாள மஸ்ஜித் சம்பந்தமான செய்தியின் நம்பகத்தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர் இந்த செய்தி நமது இணயத்தில் மாத்திரம் பிரசுரம் செய்யப்பட்ட செய்தி அல்ல மேலும் எத்தனை இணையங்களில் இது பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரிம்புகின்றவர்களுக்கு கீழே உள்ள இணயத்தள (லிங்கை) இணைப்பை (கிளிக்) செய்து பார்க்கவும் நாம் இதை ஒரு செய்தியாக மட்டுமே பிரசுரம் செய்து உள்ளோம் இதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் நிரூபிக்க முடியவில்லை



http://www.eegarai.net/-f23/----t39757.htm

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74687

http://urimaikkural.com/2010/08/25/உலகையே-ஆச்சரியத்தில்-ஆழ/

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=16068

http://tamil10.com/submit/video/முஸ்லிம்களின்-பள்ளிவாசலில்-அதிசயமான-சம்பவம்/

http://tamilnewspoint.blogspot.com/2010/08/blog-post.html

http://www.hi2web.com/forum/showthread.php?t=22889

http://urimaikkural.com/2010/08/25/முஸ்லிம்களின்-வணக்கஸ்தல/

http://www.tamilsguide.com/details.php?nid=31&catid=27834

http://paadumeen.blogspot.com/2010/08/blog-post_2019.html

http://kottikidakuthu.blogspot.com/2010/08/blog-post_26.html

http://www.malikarasi.com/2010/08/blog-post_5093.html

http://www.tube.lk/video/122/stupid-people

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1282737170&archive=&start_from=&ucat=1&

http://www.tamilcnn.net/detailnews.php?id=141

http://www.tamilcnn.net/detailnews.php?id=141

Friday, August 27, 2010

முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)


முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு)



நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..

நன்றி:http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1282737170&archive=&start_from=&ucat=1&



இரத்த உறவை துண்டிப்பவன் சுவனம் புகுவானா?

கே. எம். ஏ. அkஸ் சாய்ந்தமருது

இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம். அதில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும், அதற்கு மாற்றமாக வாழும் பட்சத்தில் எவ்வாறான தண்டனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்ற சட்ட வரையறை சகல அம்சங்களிலும் பொதிந்து காணப்படுவ தால்தான் இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம் என்பதை சகலரும் புரிந்து, ஏற்றுக் கொள்ளத்தக்க தாக அமைந்துள்ளது.

இந்த வகையில் சகோதரத்துவம் ஐக்கியம் பற்றிக்குறிப் பிடும் பொழுது, “நீங்கள் ஒவ்வொரு வரும் உடன் பிறப்புக்களே” உங்களுக் கிடையில் குரோதத்தை வளர்த்து ஒரு வருக்கு ஒருவர் பிரிந்து விடாதீர்கள். ஒற்றுமையின் கயிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.

அப்படிப் பிரிந்தீர்களேயானால் நீங்கள் பலம் குன்றியவர்களாக ஆகிவிடுவீர்கள்” என்பதோடு நிறுத்திவிடாது, “மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து இன்னொரு சகோதரருடன் பேசாது எவர் வாழ்கின் றாரோ அவர் காபிராகி விடுவார்” என்று கண்டிப்பான எச்சரிக்கையையும் விடுத்தி ருப்பது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சமாகும். இதில், இரத்த சம்பந்த உறவென்பது உயிரோடும், உடலோடும் சங்கமமான ஒரு உன்னத வெளிப்பாடாகும்.

உடலின் ஒரு சிறு பகுதி தாக்கத்திற்குள் ளானாலும் முழு உடலும் தாக்குட்பட்ட உணர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைவது தான் இரத்த சம்பந்தப்பட்ட உறவென்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இந்த இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களைப் பற்றி அல்லாஹ்வின் அருள் மறையில் குறிப்பிடும் பொழுது, “நீங்கள் அல்லாஹ் வின் வேதத்திற்குக் கீழ் படிவதை விட்டும் புறக்கணித்து விடுவீர்களாயின் பூமியில் இரத்தத்தை ஓட்டி விஸமம் செய்வதையும், இரத்த பந்தத்தில் உள்ள உங்களது சுற்றத்தாரை யும் துண்டித்து விடவும் முனைகிaர்களா? அவர்கள் எத்தகையோரென்றால், அவர் களை அல்லாஹ் சபித்து, அவர்களை செவிடர் களாக ஆக்கி, அவர்களுடைய பார்வை களையும் போக்கி குருடாக்கி விட்டான். (அல்குர்ஆன் 47:22, 23)

மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதியை அதனை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகின்றார்களோ அவர்களும், இன்னும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என அல்லாஹ் கட்டளை யிட்ட இரத்த சொந்தத்தை துண்டித்து பூமியில் குழப்பம் செய்கிறார்களோ அவர் களுக்கும் சாபமும், நரகமுமான மிகக்கெட்ட வீடும் உண்டு. (அல்குர் அன் 13:25)

இதனை, மேலும் உறுதிப்படுத்து முகமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கி றார்கள், “உறவினர்களைத் துண்டித்து நடப்பவன் சுவர்க்கம் நுழையமாட்டான்” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

வேறொரு அறிவிப்பில், “நிச்சயமாக உறவினர்களைச் சேர்ந்து வாழ்வது றஹ்மானுடைய றஹ்மத்தின் ஒரு கிளை யாகும். எவர் உறவைத் துண்டித்து வாழ்வாரோ அவர் மீது அல்லாஹு தஆலா சுவர்க்கத்தை ஹறாமாக்கி விடுவான்” என நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக ஹஸ்ரத் ஸயீத் இப்னு யkத் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்” (நூல்கள்: முஸ்னத் அஹமத், பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்).

எந்தவொரு மனிதரும் நரக வேதனை யின் பயங்கரத்தை அறிந்த பின்னரும் அங்கு நுழைய விரும்புவாரா? விரும்ப வேமாட்டார். சுவர்க்கத்தின் மேலான சுகானுபவங்களை சுகித்து அதில் கிடைக்கும் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்.

அதனை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் அமல்கள் மூலம் தொடர்ச்சியாகச் செய்துவந்தாலும் இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் ஹறாமாக்கப்பட்டுள்ளது என்ற இச்செய்தி எவ்வளவு பயங்கர மானதும், ஆழ்ந்து சிந்திக்கக்கூடியதும் என்பதை மலர்ந்துள்ள இப்புனித ரமழான் மாதத்திலாவது நாம் ஒவ்வொருவரும் நம் மனக்கண் முன் நிறுத்திப்பார்ப்பது அவசியமாகும். மேலும், ஓரிடத்தில் இது சம்பந்தமாக அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய அறிவுரை பின்வரும் ஹதீஸ் மூலம் தெரிய வருகிறது.

அதாவது, “தனது ஆயுள் அதிகரிக் கப்பட வேண்டும், தனது தேவைகள் அதிகமாகக் கிடைக்கவேண்டும் என எவர் விரும்புகிறாரோ அவர் தன் பெற்றோருடன் அழகிய முறையில் நடந்து தன் சொந்த பந்தங்களின் உறவுமுறையைப் பாதுகாக்கவும்” என்று றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத், அஹ்மத்)

(தொடர்ச்சி அடுத்தவாரம்...)

(கடந்த வாரத் தொடர்ச்சி...)

ஆயுள் அதிகரிக்கப்படவும் தேவைகள் நிறைவேற்றப்படவும் சொந்த பந்தங்களைச் சேர்ந்து நடப்பதன் ஊடாகவே என்ற அறிவுரையோடு மட்டும் நிறுத்தி விடாது.

“இன்னும் எவனைக் கொண்டு தமக்குரிய உரிமைகளை நீங்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கிaர்களோ அந்த அல்லாஹ்வையும், இரத்தக் கலப்புச் சொந்தங்களைத் துண்டித்து விடுவதையும் பயந்து கொள்ளுங்கள்” என அருள்மறையாம் திருமறை எச்சரிக்கையும் விடுக்கிறது.

(அல்குர்ஆன் 4:11) இன்னுமோரிடத்தில் மேலும் அவர்கள் எத்தகையோரென்றால் எதைச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ அந்த இரத்த சொந்தத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். (அல்குர்ஆன் 13:21)

மேலும் தம் பெற்றோருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் புரிந்திருக்கிறோம் (குர்ஆன் 29:8) என்ற இறைவசனங்கள் புத்தியுள்ளவர்களுக்கு நல்ல படிப்பினையாக அமைகிறது.

உலகைத் திருத்தவந்த உத்தமதூதர் றசூலேகரீம் (ஸல்) அவர்கள் கூறியதாக, ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், இரத்த உறவு அர்ஸிலே தொங்கிக் கொண்டிருக்கும், அது, யார்? என்னைச் சேர்ந்து நடந்தாரோ, அவரை அல்லாஹ்வும் சேர்த்துக் கொள்வானாக! யார்? என்னைத் துண்டித்து வாழ்ந்தாரோ அல்லாஹுதஆலாவும் அவனைத் துண்டித்து விடுவானாக என்று கூறிக் கொண்டிருக்கும். (நூல் புகாரி, முஸ்லிம்)

மற்றுமோர் அறிவிப்பில் ஹஸ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் யாறசூலுல்லாஹ் எனக்கு உறவினர்கள் சிலர் இருக்கின்றனர்.

அவர்களுடன் ஒற்றுமையாக நான் வாழவிரும்புகிறேன். ஆனால், அவர்கள் என்னுடைய உள்ள உறவைத் துண்டிக்கின்றனர். நான் அவர்களுடன் அழகிய முறையில் பழகுகிறேன். அவர்கள் என்னுடைய தீய முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் என்னுடைய வரம்பு மீறுவதை நான் பொறுத்துக் கொள்கிறேன். அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கின்றனர் என்று முறையிட்டார்.

“நீர் செய்வது போன்றே நிலைமை இருக்குமானால் நீர் அவர்களுடைய வாயில் சூடான சாம்பலைத் திணிக்கிaர். எதுவரை நீர் இந்தக் காரியத்தில் நீடித்து, நிலைத்து இருப்பீரோ அதுவரை, எல்லா நேரமும் அல்லாஹுதஆலாவின் புறத்தில் இருந்து ஓர் உதவியாளர் உம்முடன் இருந்து கொண்டிருப்பார்” என்று நபி மணி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஸா (ரலி) அன்ஹா அறிவிக்கிறார்கள் (நூல்: முஸ்லிம்)

ரசூல் (ஸல்) அவர்கள் பிறிதோரிடத்தில் கூறும் பொழுது “உறவு முறிவதை தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படும் மீpனிlழி ஒப்பிட்டுள்ளார்கள். அந்தச் சூடு இணைந்து நடத்தல் என்ற தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது” ஒற்றுமைப்பாலத்திற்கு வித்திட்ட உம்மி நபி (ஸல்) அவர்களின் உதாரணமாக ஐக்கியப்படுவதன் அவசியத்தைத் தெட்டத்தெளிவாக உணர்த்தி இது சிந்தித்துணர்பவர்களுக்கு சிறந்த பாடமாக அமைகிறது.

இன்னுமோர் அறிவிப்பில் றசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸல்மான் இப்னு ஆமில் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், “நீங்கள் நோன்பு திறப்பதானால் பேரீத்தம் பழத்தால் நோன்பு திறவுங்கள் ஏனெனில் அது ‘பறக்கத்’ ஆகும். அப்படிப் பேரீத்தம் பழம் இல்லையென்றால் தண்ணீரால் நோன்பு திறவுங்கள்.

ஏனெனில் அது சுத்தம் செய்யக்கூடியதாகும். மேலும், ஒரு ஏழைக்குச் சதகாச் செய்தால் அது ஒரு சதகாதான். ஆனால் அது உறவினருக்குக் கிடைத்தால் அது இருவகை ஆகிவிடுகிறது. ஒன்று சதகா, மற்றது உறவு முறையைச் சேர்ந்து நடப்பது என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி)

இன்றைய நம் சமூக அமைப்பானது எவ்வாறான கீழ்த்தரமான நிலைக்குப் பின்தள்ளப்பட்டு, அந்நிய சமூகத்தினராலும் எள்ளி நகையாடுமளவிற்கு மாற்றம் பெற்றுள்ளதென்பதை அவதானிக்கும் பொழுது இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைதான் ஏற்படுகிறது.

பொருளாதார நப்பாசையால் உடன் பிறப்புகளுக்கிடையில் முறுகல், சீதனம், மற்றும் சீரழிந்த செயற்பாடுகளினால் வயது வந்த பெற்றோர் வாழ வழியின்றியும், வசிக்க இடமின்றியும் நடுத்தெருவில் அலைமோதும் அவலம், குடும்பங்களுக்கிடையே சிற்சிறு பிரச்சினைகளையும் பூதாகரமாக உருமாற்றி எந்த நன்மை, தீமைகளிலும் பங்கேற்காது, கோடு, இணக்க சபை என்ற வட்டத்திற்குள் நின்று வலம் வருகின்ற அசிங்கமான நிகழ்வுகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருப்பதை வேதனையுடன் அவதானிக்க முடிகிறது.

ஒன்றுபட்ட ஐக்கிய வாழ்வுக்குப் பதிலாக இரண்டும் கெட்டான் நிலையில் மார்க்க முரண்பாடுகளால் முற்றிய விதண்டாவாதம், கொலை, இரத்தவெறியால் தன் இனத்தைத் தானே அழிக்கின்ற தான்தோன்றிச் செய்கைகள் தாண்டவமாடுவது துரதிர்ஷ்ட வசமானதே.

இந்த நிலைமைகளில் இருந்து சமூகம் மாறுபட வேண்டுமானால் கட்டுக்கோப்பான ஒரு சமூக அமைப்பு இஸ்லாமிய இலட்சிய ரீதியில் உருவாதல் காலத்தின் அவசியத் தேவையாகும். உயிரும் உடலுமாக வாழவேண்டிய இரத்த உறவுகள் நாயும், கறிச்சட்டியுமாக மாறி எந்தவிதத் தொடர்புகளிலும் பங்கேற்காமலும், மரணம் வரை பிரிவுத்திரைக்குள் சங்கமமாவதை நிஜமான நிகழ்வுகளாக அரங்கேற்றம் பெறும் அன்றாடம் காண்கின்ற அவலங்களாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

இரத்த உறவைத் துண்டித்து வாழ்பவர்களுக்கு சுவர்க்கம் ஹறாமாக்கப்பட்டுள்ளது என்ற இறைமறை, அண்ணல் நபி (ஸல்)யின் அமுதவாக்கைப் புறம் தள்ளிவிட்டு சைத்தானிய வலைக்குள் சிக்குண்ட சிறு குரட்டைகளாய் அலைமோதுவோமானால் ஆண்டுக் கணக்காய் தொழுது, ஹஜ், தானதர்மம் செய்தாலும் இதனால் என்ன பிரயோசனம் ஏற்படப்போகிறதென்பதை ஈமானியக் கண்ணோட்டத்தில் சிந்தித்து தெளிவு பெறுவோமாக!

அருள் பெங்க மலர்ந்துள்ள இப்புனித முஹர்ரம் மாதத்திலாவது கறைபடிந்துள்ள இரத்த உறவை ஆத்மீகப் பன்னீரால் கழுவி சுத்திகரித்து, அனைவரையும் அணைத்து வாழும் ஐக்கியப்பட்ட குடும்பங்களாக மாற்றியமைக்க அல்லாஹ் நம்மனைவருக்கும் தெளபீக் செய்தருள்வானாக! (து)

நன்றி:http://www.thinakaran.lk/

Wednesday, August 25, 2010

[Tharjuma Daily] ....::: The Holy Quran :::... - Say


இஸ்லாத்தின் பார்வையில் சோம்பல்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சகோதரர் M. அன்வர்தீன்

சுறுசுறுப்பின் எதிரிதான் சோம்பல்!
முன்னேறிச் சென்றிட தடை செய்யும் சோம்பல்!
முயற்சியை வீணாய்ச் சிதறடிக்கும் சோம்பல்!

சோம்பல் மிக்கவர்கள் படுக்கையைவிட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்துவிட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள். சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட சோம்பலைப்பற்றி, சோம்பேறிகளைப் பற்றி இஸ்லாத்தின் பார்வையில் சுருக்கமாகப் பார்ப்போம். அல்லாஹ் தன் திருமறையிலே பல இடங்களில் நயவஞ்சகர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இந்த சோம்பலைப்பற்றியும் குறிப்பிடுகின்றான். யார் ஒருவர் தொழுகையில் சோம்பலுடன் தொழுகிறாரோ அவரை அல்லாஹ் ‘நயவஞ்சகர்கள்’ என்று அல்லாஹ் அடையாளம் காட்டுகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” (அல்-குர்ஆன் 4:142)

எனவே, சோம்பல் என்பது நயவஞ்சகத்தின் அடையாளம் என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டும்.

சோம்பலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்:

1) அதிகாலையில் எழுந்து பஜருடைய தொழுகையை நிறைவேற்றுதல்: -

ஒருவர் சோம்பலில் இருந்து விடுபட்டு, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையவேண்டுமா? அதற்கு, நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த வழியை நமக்கு காட்டியிருக்கிறார்கள்.

உண்மையிலேயே பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் இந்த வழியைப் பின்பற்றி நடப்பதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது; உறங்கு என்று கூறுகின்றான். அவர் அதிகாலையில் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்’ {அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி}

பஜ்ர் தொழுகைக்கும் சுறுசுறுப்புக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. சுறுசுறுப்புடன் அன்றைய தினத்தைத் தொடங்குபவர் பஜ்ர்

தொழுதவராவார். சோம்பல் நிறைந்தவராக அன்றைய தினத்தை அடைந்தவர் ஷைத்தானோடு சேர்ந்து உறங்கி, பஜ்ர் தொழுகையை தொழாதவர் ஆவார். மேற்கண்ட இரண்டு பிரிவினரில் நாம்

எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

2) வயிறு புடைக்க சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்!

இந்த விஷயத்தில் நாம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கடைபிடிக்காததால் சோம்பேறிகளாகக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அளவுக்கு மீறி உண்பது நம்மைச் சோம்பேறிகளாக்குகின்றது. ஒருவரைப் பார்த்து, ஏன் சோம்பலாக இருக்கிறாய் என்று கேட்கும் போது அவர், ‘உண்ட மயக்கம்; அது தான் காரணம்’ என்று கூறுவதை இன்று நாம் சர்வ சாதாரணமாக காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள், அரை வயிறு சாப்பிட்டு, கால் வயிறு தண்ணீர் குடித்து, கால் வயிறை காலியாக வைப்பார்கள். நாமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றினால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

3) இரவில் தாமதமாக படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்!

நம்மில் பலர் இரவில் தாமதமாக உறங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கக் கூடியவர்களாக இருக்கிறோம். இதுவும் நபி (ஸல்) அவர்களின் வழக்கத்திற்கு மாறான செயலாகும். நபி (ஸல்) அவர்கள் இரவில் முன்னேரத்தில் உறங்கி, தஹஜ்ஜத் தொழுகைக்காக சீக்கிரம் எழுந்திருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆகையால் நாம் சீக்கிரமாக உறங்கி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் சோம்பலில் இருந்து தவிர்ந்துக் கொள்ளலாம்.

4) சோம்பலை விட்டும் நம்மை பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்தல்!

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள்.

‘யா அல்லாஹ்! கவலை, துயரம், இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், மனிதனின் ஆதிக்கம் மற்றும் கடனின் சுமை ஆகியவற்றைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்ற துஆவை தொழுகையில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம் : புகாரி)

ஆகையால், ஈருலக வெற்றிக் கனியை நம்மிடமிருந்து பறித்துவிடுகின்ற அளவிற்கு மோசமான இந்த சோம்பலை நாம் மேற்கண்ட நபிவழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விரட்டுவதற்கு முயற்சி செய்ய செய்ய வேண்டும். ‘நாளையிலிருந்து நமது முயற்சியைத் துவங்கலாம்’ என்று சோம்பலின் காரணமாகத் தள்ளிபோடாமல் அதை இப்பொழுதிலிருந்தே கடைப்பிடிக்க வேண்டும்.

சோர்வு’ என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ‘தீர்வு’.

சோம்பல்மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ! எனவே சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாகவும்.


நன்றி:http://suvanathendral.com/


விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்