அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையம் உங்களை அன்போடு வரவேற்கின்றது, وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ 3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

Friday, September 20, 2013

ஏன் வேண்டும் இந்த மாற்றம்?


அஸ்ஸலாமு அலைக்கும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

இப்போதைய நமது தலைமுறையில் பெரும்பாலானவர்கள்  இந்த மார்கத்தை விட்டு பாராமுகமாக இருப்பதும் பெயருக்கு முஸ்லீம்களாக வாழ்வதும் மார்க்க கல்வியை விட உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இஸ்லாமிய வாழ்வியலுக்கு நேர் விரோதமாக இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை இருப்பதும் எனக்கு நெருடலை ஏற்படுத்தியது இதற்கு என்னக் காரணம் என்று ஆராயும் பொழுது, இஸ்லாத்தின் ஆணிவேரான, இம்மை மறுமை என்று ஈருலகத்திற்கும் தேவையான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை தன்னுள்ளே வைத்துள்ள திரு மறை குர் ஆனை ஒரு மந்திரமாக கற்று கொண்டதோடு நம்மில் பெரும்பான்மையினர் நிறுத்திக் கொண்டோம்,

அதற்கு காரணம் நாம் இந்த அற்புத வேதத்தை கற்றுக் கொடுக்கும் முறை! அதை கற்று கொள்ளும் முறை என்று இரண்டுமே பெரும்பாலும் ஒரு சம்பிரதாயதிர்காகவே நடைப் பெருவதால்தான் என்பதாக உணருகின்றேன்,

எனவே என் மனதில் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஆசை படுகின்றேன் இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும், இந்த கட்டுரையில் நீங்கள் எதை தவறாக உணருகின்றீர்களோ அதை தெரிய படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் தவறாக இருக்கும் பட்சத்தில் திருத்திக் கொள்கின்றேன்  

மேன்மை மிகு கண்ணியமிக்க  முஸ்லிம்களே நான் இங்கே குறிப்பிட விரும்புவது ஈருலக வெற்றியின் இரகசியங்களை தன்னுள்ளே வைத்துள்ள அற்புத சத்திய வேதமான அருள்மறை திருக்குர் ஆணை நாம் கையாளும் விதம் குறித்து,

நமது மதரசா கல்வி முறை எப்படி உள்ளது! அது எப்படி மாற வேண்டும் 
 ஏன்  மாற வேண்டும் என்பது போன்ற விசயங்களை நாம் இங்கே படிக்க இருக்கின்றோம் 

அல்லாஹ் திருமறை குர் ஆனிலே கூறுகின்றான் 


2:53   وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
2:53இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
மேலே உள்ள திருக்குர் ஆன் வசனத்தை புரிந்து நன்மை தீமைகளை பிரிந்து அறிந்து அதன் அடிப்படையில் தீமைகளை விட்டு விலகி நன்மையின் பக்கம் நமது பயணம் இருக்கின்றதா? 
அப்படி இருந்து இருக்குமேயானால் இந்த சமூகம் நன்மைகளின் பூங்காவாக,ஒழுக்க மாண்புகளின் கோட்டையாக இருந்து இருக்கும், இறை அச்சம் நிறைந்த மனித அரண்களின் கூடாரமாக இருந்து இருக்கும்!
இப்படி தான் இருந்தது நபி முகம்மது (ஸல்) அவர்கள் கட்டமைத்த சகாபாக்கள் வாழ்ந்த சமூகம்,  திருக்குர் ஆனுக்கும் தங்களது வாழ்க்கை முறைக்கும் எந்த வித்யாசமும் இருந்தது இல்லை, திருக்குர்  ஆனாகவே வாழ்ந்து காட்டினார்கள், உலக மக்களுக்கு ஒரு முன்மாதிரி சமூகமாக வாழ்ந்து காட்டினார்கள்,
இந்த அற்புதமான வாழ்க்கை முறை நம்மிடையே இருக்கின்றதா ?  இல்லை என்றால் அது இல்லாமல் போனதற்கு காரணம் என்ன?
இந்த அற்புத திருமறையின் ஆழமான அர்த்தங்களை நாம் விளங்காமல் இருப்பதே! இதை நம் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு நாம் எடுத்த நடவடிக்கைதான் என்ன?
நாம் இந்த மார்க்க கல்வியை கற்று தருவதில் நாம் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கின்றோம் என்பதை பாப்போம்,
 தினமும் இந்த மார்க்க கல்வியை நமது வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதற்கு மதரசாவிற்கு அனுப்பி வைக்கின்றோம் அங்கே அந்த குழந்தைகள் கற்று கொள்ளும் முறையை பற்றிதான் இப்போது அலச போகின்றோம், இந்த கல்வி முறை எந்த மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும், ஏன் இந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதை என்பதை பற்றி இப்பொது விரிவாக பாப்போம்  
தினமும் நமது மதரசாக்களில் குழந்தைகளுக்கு முதலில் அலீப் ஜூசு அதாவது அரபு எழுத்துக்களை படிக்க கற்று கொடுப்பார்கள் பிறகு அல்ஹம்து ஜூசு இதில் திருக்குர் ஆணின் சிறிய சூராக்களின் தொகுப்பு பிறகு திருக்குர் ஆன் பிறகு சுன்னத் சுபியான் இவை இத்தனையும் அரபு மூலத்தில் வாசிப்பதற்கு இந்த மதரசாக்களில் கற்று தரப்படும் இதோடு சேர்த்து இஸ்லாத்தில் கடமைகள் எத்தனை உளுவின் பர்ளுகள் எத்தனை போன்ற சில அடிப்படை விஷயங்கள் கற்று தரப்படும் இவைதான் அன்றாடம் ஒவ்வொரு ஊரிலும் காலை நேர மதரசாக்களில் கற்றுத்தரப்படும் மார்க்க கல்வி ஆகும்.
இதை கற்று கொடுப்பதும், கற்றுக் கொள்வதும் வெறும் சம்ப்ரதாயதிற்குதான் நடை பெறுகின்றது எனபதை படிக்கும் பொது மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தினாலும் அதுதான் நிதர்சனம் 
சரி இதை குறை கூறுவது நமது நோக்கம் இல்லை, ஆனால் இந்த கல்வி முறையால் என்ன மாற்றத்தை தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை பற்றிதான்
திருக்குர் ஆனை அரபு மூலத்தில் வாசிக்க கற்றுகொள்வது நல்ல விஷயம் தான் ஆனால் அது மட்டும் போதுமா, இந்த அற்புத மறையின் அர்த்தங்களை விரிவாக தெரிந்து  கொள்ளாத வரை, அதை நமது உள்ளத்தில் சரியாக பதிந்து வைத்து கொள்ளாத வரையில், அதை நமது வாழ்கையில் முழுமையாக கொண்டு வராத வரையில், இந்த சமூகத்தில் எந்த அற்புத மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது,
அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் 
3:110   كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
3:110மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; என்று இறைவன் கூறுகின்றான், திருமறையின் அர்த்தத்தை விளங்கி கொள்ளாமல் நம்மால் எப்படி சிறந்த சமூகமாக மாற முடியும் எனவே இந்த அற்புத மறையின் விரிவான அர்த்தங்களை நமது வீட்டு குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி போய் சேர்ப்பது,  இந்த கல்வி முறை எப்படி மாற வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்தக் காட்டுரையில் பாப்போம் 

Friday, September 13, 2013

ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3)


எழுதியவர்/பதிந்தவர்/உரை 
riyadussaliheen image2
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,
ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை அழுத்தவும்.
நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு முனையும் தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு, நினைவில் நிறுத்தி வாழ்வில் கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊரிலுள்ளவர்களுக்கும், இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ் கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும் பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரிய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில், மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக.
புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும், சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள் உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணிக்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கும்போதும், சமையலறையில் இருக்கும்போதுமாக, இப்படி பல நேரங்களிலும், வகைகளிலும் கேட்கலாம். மேலும் தங்கள் அலைபேசியில் சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம்.
ரியாளுஸ்ஸாலிஹீன்” என்ற இந்த புத்தகம், அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி (ரஹ்) அவர்களின் தொகுப்பு. மிக பிரபலமான-அதாரப்பூர்வ ஹதீஸ் தொகுப்புகளாகக் கருதப்படும், புகாரி, முஸ்லிம், திர்மிதி.. போன்ற கிரந்தங்களிலிருந்து மக்களுக்கு மிகவும் பயன்படும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டவையே இப்புத்தகம்.

Source: tamilaudioislam.com
Image courtesy: satyamargam.com
நன்றி:iislamkalvi.com

விரும்பிய மொழியில் குர்ஆன்

திருக்குறள்